Thursday, October 8, 2009

தமிழ்தேசியம் பற்றி பேசும் மதிமாறினவரின் தொடர்புள்ள ரி.ஆர்.ரி வானொலியின் காட்டுமிராண்டித்தனம்

தமிழகத்தில் தமிழையும், தமிழ்தேசியத்தையும் வைத்து விளம்பரமும் பிழைப்பும் நடத்துபவர்களிம் ஒருவர் மதிமாறினவர். அவரது ஆதர்ச வானொலி ரி.ஆர்.ரி வானொலி, ஈழத்து தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிலுள்ள உண்மையான ஈழ உணர்வாளர்களுக்கும், ஈழ ஆதரவு ஊடகவியலாளருக்கும் ரி.ஆர்.ரி வானொலியின் தன்மை தெரியும்.

ஈழத்துப்போராட்டத்தினை கொச்சைப்படுத்துபவர்களுடன் கூட்டு சேர்ந்து இணையதளத்தில் அனைவரையும் அறைக்குள் அமர்ந்து புரட்சி(டு..?) செய்கிறேன் என்ற பெயரில் குழப்பி வருபவர்கள் அம் மதிமாறினவர் என்பது அனைவரும் அறிந்ததே.

அவரது நட்பு ஊடகமான ரி.ஆ.ரி வானொலியின் தன்மையை பாருங்கள்:

ஈழநாடு ஆசிரியருக்கு கொலை மிரட்டல்!

திகதி: 08.10.2009 // தமிழீழம்
பிரான்சிலிருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் சிவகுரு பாலச்சந்திரன் அவர்களுக்கு நேற்று மாலை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பல வாரங்களாக தமிழ் தேசிய ஆதரவு அரசியல் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவந்த திரு. சி. பாலச்சந்திரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி வானொலியில் சுவிஸ் நேரத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் நோக்கில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலைக் கண்டித்து அண்மையில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பாகவே இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று, புதன்கிழமை (07.10.2009) பாரிஸ் பாராளுமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற வழமையான ஒன்றுகூடலில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த வேளை, அங்கு அவரை இடைமறித்த ரி.ஆர்.ரி. வானொலி உரிமையாளர் தர்சன் எனப்படும் சிறீரங்கன், அறிவிப்பாளர் ரவீந்திரன் ஆகிய இருவரும் அவரைத் தரக்குறைவாக ஏசியதுடன் தாக்குவதற்கும் ஈற்பட்டனர்.
அங்கு கூடியிருந்தவர்கள் இடையில் புகுந்து மறித்த போதும், அந்த இருவராலும் ஆசிரியர் பாலச்சந்திரன் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். ஏற்கனவே, கடந்த 30-09-2009 அன்று மாலையும் இதே போன்று தொலைபேசியிலும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

நன்றி: சங்கதி

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1740&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

ஈழநாடு கட்டுரைகளை அதிகப்படியான தமிழர்களுக்கு தெரியும், உண்மைகளை தெளிவாக கூறி வருபவர் ஈழ நாடு ஆசிரியர்.

மதிமாறினவரின் உண்மை உருவை எடுத்துக்கூறவே இதை பதிவிட்டுள்ளோம்.

மதிமாறினவரின் ரி.ஆர்.ரி உறவின் ஆதாரம்: http://mathimaran.wordpress.com/trt-radio/

இது மட்டுமல்ல ஈழத்துக்கு எதிரான இன்னும் பல பேருடன் மதிமாறினவர் உறவுகொண்டுள்ளார்.. ஆதாரங்களுடன் விரைவில் இணைக்கப்படும்..........


1 comment:

Anonymous said...

தன்னை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் மதிமாறன், ஒருபுறம் பெரியார் தி.க தலைவர்.கொளத்தூர்.மணி,இயக்குனர்.சீமான் ஆகியோரைக் கொண்டு தமது நூல்களை அறிமுகம் செய்வார். மறுபுறம், மக இக வுடன் நல்லுறவை பேணுவார். தமிழ்நாட்டில் குழம்பிதிரிந்தவர்...இப்போது சர்வதேச அளவில் தொடர்கிறார். இப்படித் தான் சர்வதேச அறிவு ஜிவி ஆகமுடியும் போலிருக்கிறது.

Post a Comment