Saturday, July 11, 2009

இலங்கை கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களை காக்க என்ன செய்யலாம்....? வெட்டியின் சிந்தனை

வணக்கம் மக்கா

தலைப்பை பார்த்து ஏதோ முக்கியமானதா சொல்ல போறேனு நினைக்க வேண்டாம்.

வெட்டிப்பாமரபயலின் சிந்தனையில் வந்ததை சொல்லுறேன் இங்கே,

நானும் நினைவு தெரிந்த நாளிலிருந்து செய்தித்தாள்களில் இராமேஸ்வரம் மீனவர்கள் படும் கொடுமைகளை பற்றி பார்த்துக்கிட்டு இருக்கேன்.

கொஞ்ச நாள் முன்னாடி நான் வெட்டியா இருக்கும்பொழுது என் மண்டையில் தோன்றுன தீர்வை இங்கே சொல்லுறேன்.


மீனவர்களை காக்க இலங்கையின் இறையாண்மையை காக்க மீனவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு கச்சத்தீவினை இலங்கைக்கு தாரைவார்த்தது போல் இராமேஸ்வரத்தினையும் இலங்கைக்கு தாரை வார்க்க போராட வேண்டும்.


தங்களது படகுகளில் சிங்களக்கொடிகளை பறக்கவிட்டு மீன் பிடிக்க வேண்டும்.

30 நாட்களில் சிங்கள பாஷை என்ற புத்தகம் இருந்தால் அதை வாங்கி சிங்களம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சிங்கள தேசிய கீதத்தினை மனப்பாடம் செய்துகொள்ள வேண்டும்.

அல்லது

இந்தியாவில் நான் தமிழன் என்று இத்தனை நாள் இருந்து பல உயிர்களை இழந்ததால் தமிழன் என்ற அடையாளத்தினை விட்டு இந்தி, மராத்தி மொழிகளை படித்து இந்தியனாக மாறி தமிழக அரசின் தொடர்பினை விட்டு இராமேஸ்வரத்தினை மகராஸ்ட்ரா அல்லது மத்திய பிரதேச மாநிலங்களோட இணைத்துக்கொள்வது.

மேற்கண்ட எனது தீர்மானங்களை மீனவர்கள் முழுமூச்சோடு கொண்டு செயல்படுத்தினால் இப்பொழுது மீனவர்கள் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு பலியாகமல் தங்களது பேரன் பேத்திகளை காண உயிரோடு இருப்பார்கள்.

மின்னஞ்சல், எஸ் எம் எஸ் , செல்ப்போன் காலத்திலும் ஒருவர் மீனவர்களை காக்க நான் கடிதம் எழுதியுள்ளேன், அனுப்பியுள்ளேன் என்று காதில் பூ சுற்றுவதால் மேற்கண்ட சிந்தனைகள் என் மனதில் தோன்றியது.

படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் போட்டு எனது சிந்தனைகளுக்கு பூஸ்ட் ஏற்றினால் நல்லா இருக்கும்....

தொடரும் வெட்டிப்பயலின் பாமர சிந்தனைகள்..............

6 comments:

யூர்கன் க்ருகியர் said...

சூனியா "இம்" என்று சொன்னால் நீங்கள் சொன்ன அணைத்து யோசனைகளையும் நம் தமிழ்நாடு அரசியல்வாதிகள் அமுல்படுத்த தயாராக இருப்பார்கள்.

யூர்கன் க்ருகியர் said...

//மின்னஞ்சல், எஸ் எம் எஸ் , செல்ப்போன் காலத்திலும் ஒருவர் மீனவர்களை காக்க நான் கடிதம் எழுதியுள்ளேன், அனுப்பியுள்ளேன் என்று காதில் பூ சுற்றுவதால்//

காதில் மட்டுமா சுத்துறாங்க ..உடம்பு முழுதும் சுத்தி பாடையில் அல்லவா படுக்க வச்சுட்டாங்க !

யூர்கன் க்ருகியர் said...

//இந்தியாவில் நான் தமிழன் என்று இத்தனை நாள் இருந்து பல உயிர்களை இழந்ததால் தமிழன் என்ற அடையாளத்தினை விட்டு இந்தி, மராத்தி மொழிகளை படித்து இந்தியனாக மாறி தமிழக அரசின் தொடர்பினை விட்டு இராமேஸ்வரத்தினை மகராஸ்ட்ரா அல்லது மத்திய பிரதேச மாநிலங்களோட இணைத்துக்கொள்வது.//


ஹரே ..க்யா போல்தே தும் ? மே குருணா னித்ஜீஜா பாய் பாத் கர்ரஹா ஹும் .

கெக்கே கேக்கீ கு !

யூர்கன் க்ருகியர் said...

http://inthiyaa.blogspot.com/2009/06/blog-post_08.html

Shan Nalliah / GANDHIYIST said...

Great...!!! We must work hard truely to save Tamils from racist Sinhala troops and irespomsible Congress Govt...!!!
May be... TN-fishermen shd march to Chinese Embassy and request for help to safe Tamils and TN...!!!GOI worry more about GOSL rather than TN-people and feelings!

வெட்டிப்பாமர பயல் said...

பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் வெட்டிப்பாமரபயலின் நன்றிகள்

Post a Comment